மேலும் செய்திகள்
மரங்களுக்காக ரோடு வசதியை தியாகம் செய்த கிராமம்
30-Jun-2025
கோபி: கோபி-சத்தி சாலையில், அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், காசிபாளையம் வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில், புளியன், புங்கன், வாகை, வேம்பு என வரிசையாக மரங்கள் உள்-ளது. ஆடி ஆபர் பெயரில், நிலம் விற்பனை விளம்பர அட்டைகளை, ஆணி கொண்டு அடிப்பது சமீப காலமமாக அதிகரித்துள்ளது. இதனால் உயிரோட்டமுள்ள பச்சைமரங்களும் சேதமாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மரங்களில் வரிசையாக அணிவ-குத்து காட்சியளிக்கும் விளம்பர அட்டைகள், வாகனங்களில் செல்வோரின் கவனத்தை திசை திருப்புவதாக அமைந்து விபத்-துக்கும் வழிவகுக்கின்றன. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை-யினர் ஆய்வு செய்து, இதுபோன்ற தட்டிகளை அகற்றாவிட்டால், சாலைக்கு அழகை தருவதுடன், மனிதர்களுக்கு சுத்தமான காற்றை தரும் மரங்களுக்கு சிக்கல்தான் என்கின்றனர் வாகன ஓட்-டிகள்.
30-Jun-2025