உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு

குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு

கோபி, கோபி அருகே கல்லாங்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி, 25; அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இதுகுறித்து சமூக நல விரிவாக்க அதிகாரிகளுக்கு தகவல் போனது. விசாரணையில் தகவல் உண்மை என்று உறுதி செய்யப்பட்டது.அதேசமயம் சிறுமி, இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சமூக நல விரிவாக்க அதிகாரிகள் புகாரின்படி, கருப்புச்சாமி உட்பட ஐந்து பேர் மீது, கோபி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை