ரயில்வே இடத்தில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் இடித்து அகற்றம்
ஈரோடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஈரோடு மாநகராட்சி மற்றும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இருந்த, ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.ஈரோடு, கள்ளுக்கடை மேடு பகுதியில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மாநகராட்சி மற்றும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் என, தி.வி.க., நிர்வாகி ரத்தினசாமி, பொதுநல வழக்கு ஒன்றை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தி-ருந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடித்து அகற்றக்கோரி, 2023ம் ஆண்டு உத்தரவிட்டி-ருந்தது. ஆனால், மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. இதையடுத்து ரத்தினசாமி, நீதிமன்றத்தில் மேல்முறை-யீடு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை, ஒரு வாரத்துக்குள் இடித்து அகற்றி விட்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, ஈரோடு மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தர-விட்டது.அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள், சர்வேயர், ரயில்வே அதிகா-ரிகள் உள்ளிட்டோர், அப்பகுதியில் அளவீடு பணி மேற்கொண்-டனர். இதில் மாநகராட்சிக்கு சொந்தமான, 2,004 சதுர அடியும், ரயில்வேவுக்கு சொந்தமான இரண்டரை அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட இடத்தில், ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டி-ருப்பது தெரியவந்தது. பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.இதற்கு, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி அமைப்-புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து, தாசில்தார் முத்துகி-ருஷ்ணன் தலைமையில், பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அப்புறப்படுத்த ஹிந்து அமைப்பினர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தாசில்தார் முத்து-கிருஷ்ணன், 4வது மண்டல உதவி ஆணையாளர் கிருஷ்ண-மூர்த்தி, தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகா-ரிகள் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம், நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.மேலும் கோவிலையொட்டி, வி.சி.க., சார்பில் சமீபத்தில் திறக்-கப்பட்ட ஆட்டோ ஸ்டாண்டும் அகற்றப்பட்டது. அசம்பாவிதங்-களை தடுக்கும் வகையில், டி.எஸ்.பி., முத்துக்குமரன் தலை-மையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், விநாயகர் சிலைகளை அகற்ற, கோவில் நிர்வாகம் தரப்பில், இரவு வரை ( நேற்று) அவகாசம் கேட்டததால், மாநகராட்சி அதிகாரிகள் அனு-மதி அளித்தனர். சிலைகள் அகற்றிய பின், இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்றும் தொடரும் என, மாநக-ராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.---அமைச்சருக்கு தொடர்பில்லைராம பக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் வெளியிட்ட அறிக்கை:அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலை இடித்து அப்புறப்படுத்துமாறு, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நெடுஞ்சாலைத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரத்தினசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறக்கப்பட்-டுள்ளது. ஆனால், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி துாண்டுதலின் பெயரால், கோவில் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ள-தாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.உயர்நீதிமன்ற உத்தரவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நீதி-மன்ற உத்தரவுப்படி நடக்கிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.