சீமான் பேட்டியை நீக்க கோரி போலீசில் தி.மு.க., மனு
தாராபுரம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்-டியை நீக்கக்கோரி, தாராபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில், தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் வக்கீல்கள் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி-யிருப்பதாவது: ஈ.வெ.ராமசாமி குறித்து, அரசியல் சுய லாபம், விளம்பரத்துக்காக, திட்டமிட்டு உள்நோக்கத்துடன், அவம-திக்கும் வகையில், அடிப்படை ஆதாரமின்றி பொய் தகவலை சீமான் கூறியுள்ளார். இந்த பேட்டி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் சமூகத்தில் பதற்ற-மான சூழல் ஏற்பட்டுள்ளது. சீமானின் இந்த பேட்டியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.