அவசர வாகன ஊர்தி சங்கம் துவக்கம்
ஈரோடு, தி.மு.க., தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் புதிய அமைப்பாக, அவசர வாகன ஊர்திகள் சங்கம், ஈரோட்டில் துவக்கப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார். தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் பொறுப்பாளர் கோபால் தலைமை வகித்தார். ஈரோடு மின்வாரிய அலுவலகம் அருகே சங்கத்தை துவக்கி வைத்தனர். நிர்வாகிகள் மணி சிவா, மதன்குமார், சசி, ஹரி உட்பட பலர் பங்கேற்றனர்.