உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூன்று விபத்து நான்கு பேர் பலி

மூன்று விபத்து நான்கு பேர் பலி

பெருந்துறை: பெருந்துறையில் நடந்த மூன்று வெவ்வேறு விபத்துகளில் கணவன், மனைவி உட்பட நான்கு பேர் இறந்தனர். * ஊத்தங்கரை, அருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னியப்பன் மகன் முருகன் (33 ). இவர் தன் நண்பர், பெருந்துறை சீனாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவாவுடன் (27 ) பைக்கில், பெருந்துறை கடப்பமடை அருகில் சென்றார். அவ்வழியாக வந்த லாரி மோதியதில் முருகன் இறந்தார்.* பெருந்துறை, மாந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (46). இவர் தன் மனைவி மாராயியுடன் (35), மொபெட்டில் பெருந்துறை நோக்கி வந்தார். நான்கு வழிச் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வந்த, 'டாடா இண்டிகா' கார் ஒன்று மோதியதில் இருவரும் இறந்தனர்.* விஜயமங்கலம், சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சத்தியமூர்த்தி (28). இவர் மொபெட்டில், விஜயமங்கலம் அருகே சென்ற போது, வேன் மோதி இறந்தார்.பெருந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை