உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பங்களாப்புதூரில்நகை, பணம் திருட்டு

பங்களாப்புதூரில்நகை, பணம் திருட்டு

கோபிசெட்டிபாளையம்:பங்களாப்புதூரில் நகை, பணம் திருடப்பட்டது.பங்களாப்புதூர் அருகே கொண்டையம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், ஸ்வாமி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க தாலி, உண்டியலை உடைத்து 5,000 ரூபாய் வரை ரொக்கம் திருடினர்.கோவில் அருகே ஈஷாயாள்(60) என்ற மூதாட்டியின் பெட்டிக்கடையை உடைத்து, 500 ரூபாய் ரொக்கம், பொருட்களை திருடிச் சென்றனர்.பங்களாப்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர். மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ