உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் மீது பிக்-அப் வேன் மோதியதில் விவசாயி பலி

டூவீலர் மீது பிக்-அப் வேன் மோதியதில் விவசாயி பலி

காங்கேயம், காங்கேயம் அருகேயுள்ள வடசின்னாரிபாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 62; காங்கேயம் சென்றுவிட்டு ஸ்கூட்டியில் நேற்று காலை, ௧௦:௦௦ மணிக்கு சென்று கொண்டிருந்தார். கோவை ரோடு, அகஸ்திலிங்கம்பளையத்தில், அதிவேகமாக வந்த பிக்-அப் வேன் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ