உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா

ஈரோடு: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் (சுயநிதி பிரிவு), இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க நடந்தது. முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை உரையாற்றினார். இயக்குனர் வெங்கடாசலம் வர-வேற்றார். முதல்வர் சங்கரசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். திரைப்-பட இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பன் 'ஆண்களுக்கு இணையாக பெண்கல்வி உயரட்டும்' என்றும் 'உனக்கு பிடித்-ததை செய்தால் வாழ்வில் வெற்றியடையலாம்' எனவும், 'மேற்ப-டிப்பு படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. வணி-கவியல் துறை தலைவர் இளம்பரிதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை