உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செம்முனீஸ்வரர் கோவிலில்28ல் ஆயக்கால் போடுதல்

செம்முனீஸ்வரர் கோவிலில்28ல் ஆயக்கால் போடுதல்

அந்தியூர்:அந்தியூர் தாலுகா பட்லுார் அருகே பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 28ல் ஆயக்கால் போடுதல் நடக்கிறது. மே, 1ல் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், 2ம் தேதி முதல் வன பூஜை, 16ம் தேதி முதல் 1௮ம் தேதி வரை மறு வன பூஜையும் நடக்க உள்ளது. மறு பூஜையன்று மாட்டுச்சந்தை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி, பரம்பரை பூசாரிகள் ஈஸ்வரன், லட்சுமணமூர்த்தி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !