உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேம்பாலத்தில் டூவீலர் மீது மோதிய லாரி சேலம் தொழிலாளி பலி; 2 பேர் சீரியஸ்

மேம்பாலத்தில் டூவீலர் மீது மோதிய லாரி சேலம் தொழிலாளி பலி; 2 பேர் சீரியஸ்

பவானி: பவானியில் மேம்பாலத்தில் டூவீலருடன் நின்ற மூன்று பேர் மீது, டேங்கர் லாரி மோதியதில், ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்-தனர். சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் சோனு, 22; தமிழ், 26; சேலம், முத்தநாயக்கன்-பட்டி எல்லாயூரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 33; மூன்று பேரும் கட்டட தொழிலாளர்கள். கோயம்-புத்துாருக்கு வேலைக்கு சென்ற மூவரும், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, யமாஹா எப்.இசட்., பைக்கில் சேலத்துக்கு கிளம்பினர். இரவு, 9:30 மணியளவில், ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமிநகர் மேம்பாலத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.அப்போது அதிவேகத்தில் வந்த டேங்கர் லாரி, மூவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மூவரையும் அப்பகுதி-யினர் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே சோனு இறந்தார். மற்ற இருவரும் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை