உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மதுரை லாட்டரி வியாபாரிகள் ஈரோட்டில் சிக்கினர்

மதுரை லாட்டரி வியாபாரிகள் ஈரோட்டில் சிக்கினர்

ஈரோடு: ஈரோட்டில் பதுங்கிய லாட்டரி வியாபாரிகளை, மதுரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரில் சில மாதங்களாக வசிப்பவர் கோச்சடையான், 55, ஸ்ரீதர், 37. மதுரை பி.கல்லுப்-பட்டி பகுதியில், கோச்சடையான் லாட்டரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது, போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக, அவரை மதுரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், மொபைல் போன் மூலமாக, ஈரோட்டில் இருந்தபடியே லாட்டரி சீட்டு விற்பனையை கோச்சடையானும், அவருக்கு உதவியாக ஸ்ரீதரும் இருந்து தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில், சைபர் க்ரைம் போலீசார் மூலம் மொபைல் போன் டவரை அடிப்படையாக கொண்டு, கோச்சடையானின் இருப்-பிடம் அறிந்து, மதுரை சிறப்பு பிரிவு போலீசார் நேற்று முன்-தினம் ஈரோடு வந்தனர். இருவரையும் கைது செய்து விசார-ணைக்காக மதுரைக்கு அழைத்து சென்றனர். ஈரோட்டில் தலைம-றைவாக இருந்து, மதுரை வாடிக்கையாளர்களுடன் மொபைல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்தது, போலீ-சாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ