கீரனுாரில் பனை விதை நடவு
காங்கேயம்: காங்கேயம் வட்டார தோட்டக்கலை துறை பனை மேம்பாட்டு இயக்கத்தில், காங்கேயம் யூனியன் கீரனுார் பஞ்சாயத்தில், பனை விதை நடவு செய்யும் நிகழ்வு நடந்தது. பஞ்., தலைவர் ஈஸ்வர-மூர்த்தி, காங்கேயம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சதீஸ்-குமார் தலைமை வகித்தனர். தோட்டக்கலை அலுவலர் நிவேத-குமார் முன்னிலையில், 500 பனை விதைகளை நடவு செய்தனர்.