உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவுந்தப்பாடியில் பழனி தேவஸ்தானம் வெல்லம், நாட்டு சர்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடியில் பழனி தேவஸ்தானம் வெல்லம், நாட்டு சர்க்கரை கொள்முதல்

கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 54.80 லட்சம் ரூபாய்க்கு, நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது.கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டையாக, 2,740 முதல், 2,760 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,550 முதல், 2,630 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 2,069 மூட்டை, 53.98 லட்சம் ரூபாய்க்கு விற்றது. அதேபோல் உருண்டை வெல்லம், 50 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,650 ரூபாய் விலையில், அனைத்து மூட்டைகளும், 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்தை, பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 54.80 லட்சம் ரூபாய்க்கு, கொள்முதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ