ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
பெருந்துறை, பெருந்துறை, வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் அருள் பிரகாஷ், 52; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நிலம் வாங்கி விற்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்து, நேற்று முன்தினம் மாலை, வேப்பம்பாளையத்தில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.