நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்ய கோரிக்கை
ஈரோடு, ஈரோடு மாணிக்கம்பாளைத்தில் உள்ள, அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், மாநகராட்சி வார்டு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மாணிக்கம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், எல்.கே.ஜி.,-யு.கே.ஜி.,யில், 70க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். இரண்டு வகுப்பிற்கும் சேர்த்து ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், குழந்தைகளை பராமரிப்பது, பாடம் செல்லி கொடுப்பதில் சிரரம் ஏற்படுகிறது. ஓராண்டுக்கு மேலாக ஆசிரியர் சேர்க்கப்படாமல் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.