உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்

மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்

ஈரோடு: ஈரோட்டில், நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெரியார் நகர் பகுதியில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சு-றுத்தி வந்தன. எனவே, நாய்களை பிடிக்க வேண்டும் என, மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் முறையிட்டனர். அதன்-படி, பெரியார் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த, 10க்கும் மேற்பட்ட தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பிடித்தனர். பின், சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், மாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை