உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் வளர்ச்சி துறை போட்டி பரிசு வென்ற மாணவர்கள்

தமிழ் வளர்ச்சி துறை போட்டி பரிசு வென்ற மாணவர்கள்

ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மு.நிவேதாஸ்ரீ, வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வி.நா.தமிழ்க்கனி, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி சு.நித்திலா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்து, முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசுவென்றனர். சீனாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வெ.பாரதிகிருஷ்ணா, சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஹ.சூ.நிவேதனா ஆகியோர், அரசு பள்ளி மாணவர்கள் என்ற ரீதியில் சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாய் வென்றனர்.கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில், ஈரோடு பாரதியார் பல்கலை விரிவாக்க மையம் சு.அமல் உன்னி கிருஷ்ணன், ஈரோடு வேளாளர் மகளிர் கல்லுாரி க.தருணிகா, சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லுாரி கு.சர்வேஸ்வரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து, ரொக்கப்பரிசு வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி