மேலும் செய்திகள்
சக்தியின் அம்சமாக விளங்கும் வேப்ப மரம்
08-Oct-2024
பவானி: இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள, பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில் கோவிலுக்கு, 27 அடி உயரத்தில் வேங்கை மரத்-தாலான கொடிமரம் கோவிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்து, லாரி மூலம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனியாண்டவர் கோவில் வீதி. பஜனை வீதி, அந்தியூர் பிரிவு, தேர்வீதி, பூக்கடைவீதி வழியாக, செல்லியாண்டியம்மன் கோவி-லுக்கு கொடிமரம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெ-டுக கொடிமரத்தை தொட்டு பக்தர்கள் வணங்கினர். நவம்பர் மாதம் கோவில் முன்பு நடப்படும் எனவும் தெரிகிறது.
08-Oct-2024