சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச விழா
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலின் நடப்பாண்டு தைப்பூச விழா, 15 நாட்கள் நடக்கும். நடப்பாண்டு தைப்பூச விழா சம்பிரதாய முறைப்படி செங்குந்த முதலியார் சமூக பெரியவர்கள் முன்னிலையில், மலை மீதுள்ள, 34 அடி உயர கொடிமரத்தில் சேவல் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்-கியது.முன்னதாக கைலாசநாதர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு தீர்த்த குடங்களுடன் காலை, 7:20 மணிக்கு தொடங்கியது. படிக்கட்டு வழியாக சுவாமி கொண்டு செல்லப்பட்டது. அங்கு முளைப்பாரி பூஜை, காப்பு கட்டும் நிகழ்வு, மயூரயாகம் நடந்தது. அதன் பிறகு உற்சவ மூர்த்திகள், மூலவர்களுக்கு சிறப்பு அபி-ஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, சுவாமிக-ளுக்கும், கொடிமரத்துக்கும் காப்பு கட்டினார். மதியம், 12:50 மணிக்கு சேவல் கொடி மேளதாளம் முழங்க திருக்கோவிலை வலம் வந்து, முருகன் சன்னதி கொடி மரத்தில் சேவல் கொடி-யையும், மார்கண்டேஸ்வரர் ஆலயம் முன் நந்தி கொடியையும் ஏற்றி விழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தைப்பூச தேரோட்டம், 11ம் தேதி காலை, 6:30 மணிக்கு நடக்கி-றது. விழா முக்கிய விழாவான மகா தரிசனம், 15ம் தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது.