மயங்கி கிடந்த முதியவர் மரணம்
ஈரோடு: ஈரோடு, செட்டிபாளையம் தனியார் பிரட் கம்பெனி அருகே, நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். ஈரோடு தாலுகா போலீசார், மயங்கி கிடந்தவரை சோதனை செய்தபோது, அவர் இறந்திருப்பதும், 75 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.