உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வாரச்சந்தை வளாகத்தில் நேற்று காலை 6:00 மணியளவில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவருக்கு, 70 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ