உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெயில் தாக்கத்தின் நடுவில் ஓட்டளித்து அசத்திய மக்கள்

வெயில் தாக்கத்தின் நடுவில் ஓட்டளித்து அசத்திய மக்கள்

ஈரோடு : ஈரோடு மாவட்டம் மற்றும் மாநகரத்தில் இரு வாரமாக தொடர்ந்து, 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டுகிறது. மாநிலத்தில் பல நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி, வேலுாரை பின்னுக்குத் தள்ளி ஈரோடு முதலிடம் பிடித்தது.இந்நிலையில் லோக்சபா ஓட்டுப்பதிவு தினமான நேற்று, வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் வழக்கத்தை விட வெயில் வாட்டியது. அதாவது, ௧௦9 டிகிரி வெயில் நேற்று பதிவானது. ஆனாலும், மக்கள் ஓட்டளிக்க ஆர்வம் காட்டினர். வெயிலை பொருட்படுத்தாமல் ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்து ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ