டிச., 7ல் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்
குறைதீர் கூட்டம்: ஈரோடு, நவ. 30-ஈரோடு, கலெக்டர் அலுவலகத்தில் வரும் டிச., 7 காலை, 10:00 மணிக்கு, படை வீரர் கொடி நாளை முன்னிட்டு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கு தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இதை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள், படையில் பணிபுரிவோரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை நேரில் சமர்ப்பிக்கலாம்.