மேலும் செய்திகள்
துாக்கில் ஆண் உடல் போலீஸ் விசாரணை
02-Feb-2025
கச்சிராயபாளையம், ;கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்ச பதுக்கப்பட்ட1, 850 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கல்வராயன் மலையில் உள்ள வராம், கெடார் உள்ளிட்ட கிராமங்களில், கரியாலுார் போலீசார் நேற்று காலை சாராய சோதனை செய்தனர். அப்போது வராமை சேர்ந்த, சடையன் மகன் ஏழுமலை, 40; என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில் சாக்கு மூட்டைகளில், சாராயம் காய்ச்ச 1,850 கிலோ நாட்டு வெல்லம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதை உடனடியாக பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து தப்பி ஓடிய, ஏழுமலையை தேடி வருகின்றனர்.
02-Feb-2025