உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு வேறு இடங்களில் தவறி விழுந்த 2 பேர் சாவு

இரு வேறு இடங்களில் தவறி விழுந்த 2 பேர் சாவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற விவசாயி தவறி கீழே விழுந்து இறந்தார்.சின்னசேலம் அடுத்த புக்கிரவாரியைச் சேர்ந்தவர் செல்வராசு, 50; விவசாயி. இவர், கடந்த 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள ஏரிக்கரைக்குச் சென்றார்.அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் செல்வராசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு வீட்டின் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ