உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் 24ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் 24ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் செய்திக்குறிப்பு:அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படும், ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி துவங்குகிறது.அதன்படி, 24ம் தேதி பி.காம்., 25ம் தேதி பி.ஏ., தமிழ், 26ம் தேதி பி.எஸ்சி., புள்ளியியல், கணினி அறிவியல், 27ம் தேதி பி.ஏ., பொருளாதாரம் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும்.கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியலை www.gascrishivandiyam.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை