உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு

சாராயம் விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த சேஷ சமுத்திரம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில் சாராயம் விற்ற மணிகண்டன் மனைவி அம்பிகா, 35; அண்ணாமலை, 51; பாவளம் கிராமத்தில் முருகேசன், 47; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 200 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைபற்றி வழக்கு பதிந்தனர். கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்