உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையோரம் நிறுத்திய கார் தீப்பிடித்து நாசம்

சாலையோரம் நிறுத்திய கார் தீப்பிடித்து நாசம்

தலைவாசல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ராயர்பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூனன், 48. ஆத்துாரில் இருந்து சின்னசேலம் நோக்கி, 'ரெனால்ட் - கிவிட்'(பெட்ரோல்) காரை நேற்று ஓட்டிச்சென்றார்.காலை, 9:10 மணிக்கு, தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, டீ கடைக்கு சென்றார். அப்போது காரின் இன்ஜின் பகுதியில் புகை எழுந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது.தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், 9:30 மணிக்கு வந்த, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ