உள்ளூர் செய்திகள்

வீட்டுமனை தகராறு

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே வீட்டு மனை தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.தேவடியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி செல்லக்கண்ணு, 30; அதே பகுதியைச் சேர்ந்தவர் மண்ணு, 56; இவர்களுக்குள் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ