உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் - விருத்தாசலம் ரயில் பாதையில், எஸ்.ஒகையூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் மற்றும் சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.அதில், 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிந்தது. இறந்த நபரின் மார்பில் சூர்யா என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை