உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புரஸ்கார் விருது விண்ணப்பம் வரவேற்பு

புரஸ்கார் விருது விண்ணப்பம் வரவேற்பு

கள்ளக்குறிச்சி : பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு சாதனை குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:இந்திய அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26ம் தேதி வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு புதுமை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை புரிந்த 5 வயதிற்கு மேற்பட்டு 18 வயது மிகாமல் இருக்க வேண்டும்.வரும் ஜூலை 31 ம் தேதிக்குள் https://awards.gov.inஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்