உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / செயின்ட் ஜோசப் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

செயின்ட் ஜோசப் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

சங்கராபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சங்கராபுரம் செயின்ட் ஜோசப் பள்ளி 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி நிபியா ஆண்டோ 493, காவியா 490, தீபிகா 489 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.மேலும் தமிழில் 2 பேர் 98, ஆங்கித்தில் 4 பேர் 99, கணிதத்தில் 6, அறிவியலில் 4, சமூக அறிவியலில் 3 பேர் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளித் தாளாளர் ஜோசப் சீனிவாசன், பள்ளி முதல்வர் சாராள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ