உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இறந்தவர் யார்: போலீஸ் விசாரணை

இறந்தவர் யார்: போலீஸ் விசாரணை

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே இறந்து கிடந்த முதியவர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை தாலுகா கெடிலம் ஆற்றுப்பாலம் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தகவல் அறிந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை