உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி, மகன் மாயம்; கணவர் போலீசில் புகார்

மனைவி, மகன் மாயம்; கணவர் போலீசில் புகார்

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துாரை சேர்ந்தவர் ஜெய்ஆனந்தன்; தெலுங்கானா மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியாராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூவரும் கரடிசித்துாரில் வசித்தனர்.கடந்த மே மாதம் 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற விக்டோரியாராணி மற்றும் அவரது மகன் அபியன்ராஜ் ஆகிய இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து தகவலறிந்த ஜெய்ஆனந்தன் கரடிசித்துாருக்கு வந்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெய்ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ