உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி

சின்னசேலம்: அனுமனந்தல் கிராமத்தில் மின் மோட்டாரை சரி செய்தபோது தவறி கிணற்றில் விழுந்த தொழிலாளி இறந்தார்.சின்னசேலம் அடுத்த அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 50; விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதாகியது.அதனை சரி செய்ய நேற்று மதியம் 1:00 மணியளவில் கிணற்றில் இறங்கினார். அப்போது, தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து சென்ற சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கமுத்துவின் உடலை மீட்டனர். சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை