உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 2 பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை

2 பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி:வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வரஞ்சரம் அடுத்த நாகலுாரைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகள் பவித்ரா, 19; நர்சிங் மாணவி. இவர், கடந்த 9ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

மற்றொரு வழக்கு

வரஞ்சரம் அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி வீரம்மாள், 40; இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரு புகார்களின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை