உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு குடும்பத்தினர் மோதல்7 பேர் மீது வழக்குப் பதிவு

இரு குடும்பத்தினர் மோதல்7 பேர் மீது வழக்குப் பதிவு

கள்ளக்குறிச்சி, -கீழ்குப்பம் அருகே இரு குடும்பத்தினர் தாக்கிக் கொண்டது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கீழ்குப்பம் அடுத்த கருங்குழியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மனைவி பொன்னம்மாள்,70; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனம் என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த டிச., 31ம் தேதி மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக பொன்னம்மாள் அளித்த புகாரின் பேரில், தனம், சிவரஞ்சினி மற்றும் செல்வக்குமார் ஆகிய 3 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த பொன்மணி அளித்த புகாரின் பேரில், பொன்னம்மாள், சசிக்குமார், அய்யாக்கண்ணு மற்றும் புனிதா ஆகிய 4 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை