உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சங்கராபுரம் அடுத்த செல்லம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜீவா, 25; இவர், கடந்த 5ம் தேதி ஸ்பிளண்டர் பைக்கில் பொய்குணம் நோக்கிச் சென்றார்.பொய்குணம் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 47; என்பவரது ஹீரோ பைக் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் படுகாயமடைந்த இருவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஜீவா இறந்தார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி