உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1.82 லட்சம் பறிமுதல்

 உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1.82 லட்சம் பறிமுதல்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் 1.82 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் 1:45 மணியளவில், திடீரென சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். கணக்கில் வராத பணம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், அலுவலர்கள், மற்றும் இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை மாலை வரையில் நடந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன் இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ