உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விஷம் குடித்த கொத்தனார் சாவு

விஷம் குடித்த கொத்தனார் சாவு

சின்னசேலம் : சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா, 43; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு வெளியே சென்றவவர் மாலை 4:00 மணியளவில் இந்திலி ஏரிக்கரை அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை