உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சியில் எஸ்.ஐ.ஆர்., பணி நகராட்சியில் கலெக்டர் ஆய்வு

 கள்ளக்குறிச்சியில் எஸ்.ஐ.ஆர்., பணி நகராட்சியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து சேகரித்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். நகராட்சி அலுவலகம், டேனிஷ் மிஷன் பள்ளி, எம்.ஆர்.என்., நகர் பகுதிகளில் நடைபெறும் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். நகராட்சி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை