உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

 கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவ., 26ம் நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 76வது இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். இதில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். அதேபோல், கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., மாதவன் தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், போலீசார் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். இதில் ஏ.டி.எஸ்.பி., சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ