மேலும் செய்திகள்
மனைவி மாயம் : கணவர் புகார்
29-Apr-2025
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதிய விபத்தில் ஜே.சி.பி., டிரைவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் சதீஷ்குமார்,40; ஜே.சி.பி., டிரைவர்.இவர் கடந்த, 20 ம் தேதி இரவு 9:30 மணிக்கு தனது பைக்கில், எலவனாசூர் கோட்டையில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையோரம் எச்சரிக்கை விளக்கு எரியாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Apr-2025