| ADDED : நவ 18, 2025 07:18 AM
உளுந்துார்பேட்டை: நவ. 18-: திருநாவலுார் அருகே பைக் மோதியதில் நடந்து சென்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த ஆத்துார் ஊராட்சி, கோட்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 63; கூலித் தொழிலாளி. இவர், கடந்த மாதம் 20ம் தேதி இரவு 7.30 மணியளவில் கோட்டையம்பாளையம் அருகே நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 40; பிள்ளையார்குப்பத்திலிருந்து கோட்டையம்பாளையம் நோக்கி ஓட்டிச் சென்ற பைக், ராமச்சந்திரன் மீது மோதியது. படுகாயமடைந்த ராமச்சந்திரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.