உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  விஷம் குடித்து விவசாயி தற்கொலை

 விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது பழக்கத்தால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்துாரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 52; விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடிப்பது வழக்கம். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 4ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பூச்சு மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை