மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
18-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், கலெக்டர் பிரசாந்த் தலைமையில், வரும் 25ம் தேதி நடக்கிறது. காலை 11:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Jul-2025