கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 57 ஏரிகளில் மீன்பிடி குத்தகைக்கு ஏலம் நடக்க உள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் முடியனுார், நாகலுார், குரூர், திம்மலை, வாழவந்தான்குப்பம், மாடூர், பெருவங்கூர், பிரிதிவிமங்கலம், ஏமப்பேர், சிறுவங்கூர் ஆகிய 10 ஏரிகள். உளுந்துார்பேட்டை வட்டம் நகர், வெள்ளையூர், ஆத்துார் பெரிய ஏரி, அலங்கிரி, அரளி, ஆசனுார், காட்டுநெமிலி, ஏ.புத்துார், குஞ்சரம், மேட்டத்தூர், பு.கிள்ளனுார், பூ.மலையனுார், பரிக்கல், பில்லுார், செம்பியன்மாதேவி, செங்குறிச்சி, டி.ஒரத்துார், உடையானத்தம், உதுப்பூர், கொரட்டூர், மடப்பட்டு, பாலி, காட்டுஎடையார், களமருதுர் ஆகிய 24 ஏரிகள். திருக்கோவிலுார் வட்டம் ஆவிகொளப்பாக்கம், எடையூர், எல்ராம்பட்டு, குலதீபமங்கலம், முதலுார், திருப்பாலப்பந்தல், தகடி, மாடம்பூண்டி ஆகிய 8 ஏரிகள். சங்கராபுரம் வட்டம் மஞ்சப்புத்துார், தண்டலை, பூட்டை ஆகிய 3 ஏரிகள். வாணாபுரம் வட்டம் அரியலுார், அத்தியூர், கடம்பூர், கடுவனுார், பாசார், பாக்கம், பாவந்துார், திருவரங்கம், வாணாபுரம், சித்தப்பட்டிணம், பல்லகச்சேரி, ரிஷிவந்தியம் ஆகிய 12 ஏரிகள் என மொத்தம் 57 ஏரிகள் மீன் பிடிப்பதிற்கான குத்தகை ஏலம், http://www.tnters.gov.in/ என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு விடப்பட உள்ளன. மேலும் கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தாட்கோ வளாகம், விழுப்புரம்- 605 602 என்ற முகவரி மற்றும் http://www.tnters.gov.in/ என்ற இணைய தளத்திலும், 04146--259329 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.