உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காஸ் நிறுவனத்தில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

காஸ் நிறுவனத்தில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரம் சுதர்சன் இன்டேன் காஸ் நிறுவணத்தில் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுதர்சன் இன்டேன் காஸ் நிறுவணத்தில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச உஜ்வாலா அடுப்பு வழங்கும் விழா நடந்தது.சங்கராபுரம் செல்வபிரபா மண்டபத்தில் நடந்த விழாவிற்கு காஸ் நிறுவண உரிமையாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன்,வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். நிறுவன மேலாளர் பிரபாகரன் எரிவாயு பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினார். விழாவில் 150 பயனாளிகளுக்கு இலவச அடுப்பு வழங்கப்பட்டது.காசாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை