உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஈரியூரில் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா

ஈரியூரில் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி : ஈரியூரில் புதிய துணை சுகாதார நிலைய கட்டட திறப்பு விழா நடந்தது.சின்னசேலம் அடுத்த ஈரியூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆத்மா குழுதலைவர் கனகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சீனுவாசன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் அஞ்சலைமுருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தைசேர்மன் சத்தியமூர்த்தி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் ஹரினி, தி.மு.க.,அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி முருகேசன், தொண்டரணி சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை